Monday, 23 September 2013

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ப.சிதம்பரம் Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram

- 0 comments
 காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ப.சிதம்பரம்
Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram
மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக அளவில் வாக்களித்து அவர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 78.48 சதவீதம் கைப்பற்றியுள்ளது.

போட்டியிட்ட 38 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் மாபெரும் மக்கள் ஆதரவு. இலங்கையின் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கும் மற்றும் அதை மேம்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புதமான நல்ல வாய்ப்பு என நான் கருதுகிறேன்.

மாகாணங்களில் முழு சுயாட்சி; மாகாணங்களுக்கு அதிகாரப் பங்களிப்பு; தமிழர்களுக்கும், சிறுபான் மையோருக்கும் சம உரிமை மற்றும் சம மதிப்பு; தமிழ் மக்களின் தாயகத்தில் அவர்களுக்குள்ள தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல்;

இலங்கையின் அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நான் நம்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் இலங்கைக் கொள்கையின் அடிப்படை சரியான அடிப்படையே என்பதை நிரூபித்துள்ளது.

சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது வெற்றிப்பாதை தொடர நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
[Continue reading...]

பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi

- 0 comments

பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi
Tamil NewsYesterday, 05:30

புதுடெல்லி, செப். 23-

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக என்.சீனிவாசன் 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.

இதில் சரத்பவாரின் ஆதரவுடன் ஷசாங் மனோகர் போட்டியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய  தலைவரான சீனிவாசனும் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 31 வாக்குகளில் 16 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்.

இதற்கிடையே என்.சீனிவாசன் தலைவராக தொடர உறுப்பினர்கள் யாரும் பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அவர் மேலும் ஒரு ஆண்டு பதவியில் நீட்டிக்க விதிமுறையில் வழிவகை உள்ளது. ஆனால் 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் என். சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் என்.சீனிவாசனுக்கு ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, "சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஏமாற்றம் அடைவார்கள். ஒரு தவறான செய்தி பரப்பப்படும். அது இந்திய கிரிக்கெட்டின் இறுதி நாளாக இருக்கும்" என்று தனது வழக்கமான பாணியில் எச்சரித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. நம்மை உலகமே கவனித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களின் அழைப்பை தென்மாநிலத்தைச் சேர்ந்த என் சக நிர்வாகிகள் புறக்கணிப்பது வியப்பாக உள்ளது. கறைபடிந்த ஒருவருக்கு இன்னும் ஆதரவு அளிக்கிறார்கள்" என்று மறைமுகமாகத் தாக்கினார் மோடி.
...
Show commentsOpen link

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger