Thursday, 12 September 2013

Electricity workers strike in Andhra Pradesh 850 villages affect power cut

- 0 comments

ஆந்திராவில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 850 கிராமங்கள் இருளில் மூழ்கியது Electricity workers strike in Andhra Pradesh 850 villages affect power cut Tamil NewsToday,

நகரி, செப். 13–ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், பஸ் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.44–வது நாளாக இவர்களது போராட்டம் நீடிக்கிறது.இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மின்சார ஊழியர்களும் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் பணிபுரியும் 1 லட்சம் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.ஆஸ்பத்திரி, குடிநீர் விநியோகம், ரெயில் போக்குவரத்து, விவசாய பணிகள் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப் பட்டது.பல மின் உற்பத்தி நிலையங்களில் பணிகள் முற்றிலும் முடங்கியது. காவலாளி உள்பட உயர் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மின் விநியோகம், பராமரிப்பு, உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது.ஸ்ரீகாகுளம், பிரகாசம், விசாகப்பட்டிணம் உள்பட பல மாவட்டங்களில் 850 கிராமங்கள் நேற்று இருளில் மூழ்கியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மட்டும் 85 கிராமங்களில் இருளில் மூழ்கியது.ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடக்க பல மின்சார உற்பத்தி நிலையங்களில் தொழில் நுட்பம் காரணமாக மின்சார உற்பத்தி முடங்கியது. நிலக்கரி சப்ளை இல்லாததால் விஜயவாடா மின்நிலையம் செயப்படவில்லை. ஸ்ரீசைலம் மின்நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியிலும் மின்சாரப் விநியோகம் தடைபட்டதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இன்று நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது.மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளை வரை நீடிக்க உள்ளது. ஸ்டிரைக் முடிந்தாலும் மின் விநியோகம் சீராக மேலும் 10 நாள் ஆகும் என்று கூறப்படுகிறது. ... Show commentsOpen link

[Continue reading...]

Uttar Pradesh women ias officer Durga enrolled in work again suspended order cancellation

- 0 comments

உத்தரபிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா மீண்டும் வேலையில் சேர்ந்தார்: சஸ்பெண்டு உத்தரவு ரத்து Uttar Pradesh women ias officer Durga enrolled in work again suspended order cancellation
Tamil News

லக்னோ, செப். 13–உத்தரபிரதேச மாநில கலெக்டர் துர்க்கா சக்தி நக்பல் மணல் கடத்தலை தடுத்ததால் அரசியல் பிரமுகர்களால் மிரட்டப்பட்டார்.இந்த நிலையில் அவர் ஒரு மசூதியின் சுற்றுச் சுவரை இடித்து விட்டதாக புகார்கள் எழுந்தது.உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் இது பற்றி விசாரித்து துர்க்காவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டச்சிக்கல்களும் எழுந்தன.இதற்கிடையே பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்க்கா தவறு செய்யவில்லை என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் உத்தரபிரதேச மாநில அரசு அதை ஏற்கவில்லை.இந்த நிலையில் கலெக்டருக்கும், அரசுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சிகள் நடந்தன. அதில் வெற்றி கிடைத்துள்ளது.இதையடுத்து துர்க்காவின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. துர்க்கா மீண்டும் வேலையில் சேர்ந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.தற்போது துர்க்கா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஓரிரு மாதங்களில் அவருக்கு வருவாய் துறையில் பணி கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இனி முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தும்படி அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

[Continue reading...]

பெண்ணிடம் செக்ஸ் குறும்பு: இந்திய என்ஜினீயருக்கு ஜெயில் girl molesting Freak Indian engineer jail

- 0 comments
இந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாசா எஸ்.எர்ராமில்லி (46) என்பவர் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் சிகாகோவிற்கு விமானத்தில் சென்றார். இவரது இருக்கைக்கு அருகே 62 வயது பெண் தனது கணவருடன் பயணம் செய்தார். அப்போது பெண் பயணியை அவர் 3 தடவை செக்ஸ் குறும்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜான் எச்.லிப்கோவ் விசாரித்து ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேறிய பிறகு ஓராண்டு கண்காணிப்பு செய்து அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
[Continue reading...]

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Delhi girl case court sentenced today

- 0 comments

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Delhi girl case court sentenced today 

 

டெல்லி மாணவி கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கும் தண்டனையை கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது. அப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 காமுகர்களை கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், வெட்கி தலைகுனியவும் வைத்தது.

[Continue reading...]

திருவண்ணாமலை அருகே ஆட்டோ பைக் மோதல்: கணவன் மனைவி பலி Near Tiruvannamalai Auto bike accident husband wife died

- 0 comments
திருவண்ணாமலை அடுத்த அப்புபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது32). இங்கு சைக்கிள் கடை வைத்திருந்தார். இவரது மனைவி பச்சையம்மாள்(23). பச்சையம்மாளின் தம்பி திருமணம் பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.

இதில் முருகேசனும், பச்சையம்மாளும் கலந்து கொண்டனர். இரவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். சு.ஆண்டாபட்டு அருகில் வந்த போது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
[Continue reading...]

தெண்டுல்கர், கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும்: வாசிம் அக்ரம் விருப்பம் Wasim Akram hopes Sachin will play his farewell Test against Pakistan

- 0 comments

தெண்டுல்கர், கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும்: வாசிம் அக்ரம் விருப்பம் Wasim Akram hopes Sachin will play his farewell Test against Pakistan

Tamil News

புதுடெல்லி, செப். 13- சச்சின் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும் என்று வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மன்னன் 40 வயதான சச்சின் தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அடுத்து, நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகும் சச்சின் தெண்டுல்கர், 200-வது டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய சாதனையை நிகழ்த்திய உடன் ஓய்வு பெறுவார் என்றும், மேலும் சில மாதங்கள் அவர் தொடர்ந்து ஆடக்கூடும் என்றும் யூகங்கள் கிளம்பி வருகின்றன. இதற்கிடையே, ஆண்டின் இறுதியில் மேற்கொள்ள வேண்டிய இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

தென்ஆப்பிரிக்க பயணம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. அதே சமயம் தென்ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு வரவழைத்து 2 டெஸ்ட் கொண்ட குறுகிய கால தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அக்ரம் அளித்த பேட்டி வருமாறு:- சச்சின் தெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தான் (1989-ம் ஆண்டு) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் தீவிர மோகம் கொண்ட கொல்கத்தா ரசிகர்களின் முன்னிலையில், அங்குள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த போட்டி (இந்தியா-பாகிஸ்தான்) நடக்க வேண்டும். இது தான் அவருக்கு சிறந்ததொரு பிரிவு உபசாரமாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மற்ற வீரர்களுக்கு தெண்டுல்கர் முன்மாதிரியாக இருக்கிறார். உலகின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்தியாவில், இந்த நூற்றாண்டில் சிறந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டால் அடுத்த வினாடியே எனது ஓட்டு தெண்டுல்கருக்கு தான் விழும். அவருக்கு எதிராக நான் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் கூட அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. விளையாட்டுடன் அரசியலை கலக்கக்கூடாது. இரு நாட்டு மக்களையும் ஒருங்கிணைக்கும் வலிமை கிரிக்கெட்டுக்கு எப்போதும் உண்டு. இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே விரைவில் டெஸ்ட் தொடர் நடக்க வேண்டும் என்ற கனவு நனவாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு அக்ரம் கூறினார். ...

[Continue reading...]

இந்திய கிரிக்கெட் வாரியத்தை கெஞ்சாதீர்கள்: அக்தர் அதிரடி பேட்டி Stop running after BCCI Shoaib Akhtar

- 0 comments

இந்திய கிரிக்கெட் வாரியத்தை கெஞ்சாதீர்கள்: அக்தர் அதிரடி பேட்டி Stop running after BCCI Shoaib Akhtar
Tamil News

கராச்சி, செப். 13- 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் வோல்வ்ஸ் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த அணியினர் நம்பிக்கையுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எல்லா நேரங்களிலும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பின்னால் நாம் ஓட வேண்டிய தேவையில்லை என்று எப்பொழுதும் நான் சொல்லி வருகிறேன். இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர், ஐ.பி.எல். போட்டியில் நமது வீரர்கள் பங்கேற்பது, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நமது அணி கலந்து கொள்வது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக நாம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கெஞ்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பைசலாபாத் அணிக்கு விசா வழங்கப்படாததில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. இரு நாட்டு அரசுகள் இடையே சுமுகமான உறவு ஏற்படும் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அரசின் கொள்கையை அப்படியே பின்பற்றி வருகிறது. சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நமது அணியை அழைத்த போதே முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்க வேண்டும். இந்தியாவுடனான விவகாரங்களில் நாம் சுயமரியாதையுடன் செயல்பட வேண்டும். சில ஆயிரம் டாலர்களுக்காக இந்தியா பின்னால் செல்வதை விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், நிர்வாகத்தையும் பலப்படுத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டும். நமது அணியை உலக அளவில் பலம் வாய்ந்ததாக உருவாக்கினால், மற்ற அணிகள் நம்மை தேடி வரும். இம்ரான்கான் போன்ற வலுவான கேப்டன் பாகிஸ்தான் அணிக்கு இல்லாதது பெரிய பிரச்சினையாகும். மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய முன்மாதிரியான வீரர் நமது அணியில் இல்லை. இம்ரான்கான் போல் இந்திய அணியின் கேப்டன் டோனி கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய கிரிக்கெட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவ்வாறு சோயிப் அக்தர் கூறினார். ...

[Continue reading...]

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட் Cheque cheating case preity zinta

- 0 comments

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட் Cheque cheating case preity zinta

Tamil News

மும்பை, செப். 12- இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு ரூ.18.9 லட்சத்துக்கான காசோலை கொடுத்திருந்தார். அந்த காசோலையை அப்பாஸ், வங்கியில் செலுத்தியபோது அந்த கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதையடுத்து பிரீத்தி ஜிந்தா மீது அப்பாஸ் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு 4 முறை கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அவரை ஆஜராக வரும்படி சம்மன் அனுப்பியபோது அவர் வராததால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இன்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரீத்தி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். "பிரீத்தி வெளிநாட்டில் இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தேன். ஆனால், அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய கோர்ட்டில் முறையிடுவோம் அல்லது மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம்" என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மணி ரத்னத்தின் 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரீத்தி ஜிந்தா, கடைசியாக பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவான 'இஷ்க் இன் பாரிஸ்' படத்தில் நடித்துள்ளார். ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் பிரீத்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
Show commentsOpen link

[Continue reading...]

ragging horrible student death Principal arrested

- 0 comments

ராகிங் கொடுமையால் மாணவி சாவு எதிரொலி: கொல்கத்தா பள்ளி முதல்வர் கைது ragging horrible student death Principal arrested

Tamil News

கொல்கத்தா, செப். 12- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். வெகுநேரம் தனி அறையில் அடைபட்டிருந்ததால் அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பள்ளி முதல்வர் ஹெலன், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் மாணவியின் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் வலியுறுத்தினார். மேலும் டாக்டர்கள் தன் மகளுக்கு தவறான ஊசி போட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து பள்ளி முதல்வர் ஹெலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய கல்வியமைச்சர் பிரத்யா பாசு, துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கான காரணமான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.  ...

[Continue reading...]

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் food security bill president approved

- 0 comments

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் food security bill president approved

புதுடெல்லி, செப். 12- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவு திட்டமாக கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா, கடும் அமளிக்கிடையே கடந்த 26-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்ததார். இதனால் உணவு பாதுகாப்பு மசோதா, சட்ட அந்தஸ்து பெற்று உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், முன்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் காலாவதியானது. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உணவு கிடைக்க இந்த மசோதா வகை செய்கிறது. குறிப்பாக 50 சதவீத நகர்ப்புற ஏழைகளுக்கும், 75 சதவீத கிராமப்புற ஏழைகளுக்கும் மலிவு விலையில் உணவு தானியம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ...
Visit website

[Continue reading...]

ஆக்சன் காட்சிகளில் நடிக்க காஜலுக்கு டிப்ஸ் வழங்கிய

- 0 comments

ஆக்சன் காட்சிகளில் நடிக்க காஜலுக்கு டிப்ஸ் வழங்கிய

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமான காஜல்அகர்வால், அதையடுத்து தென்னிந்தியா மற்றும் இந்தி சினிமாவரை பரவலாக நடித்த போதும், காதல், காமெடி கலந்த கதைகளிலேயே நடித்து வந்தார். அதனால் ஆக்சன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது அவருக்குள் தீராத ஆசையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் அவரை போலீஸ் கெட்டப்பில் நடிக்க கேட்டார்களாம். அதனால் மிகுந்த உற்சாகமடைந்த காஜல், சம்பளம் பற்றிகூட பேசாமல் உடனே கால்சீட்டை வாரி வழங்கியிருக்கிறார். அதையடுத்து, போலீஸ் கெட்டப்புக்காக போலீஸ் காஸ்ட்டியூம் அணிந்தபோது அவர் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லையாம்.

அதோடு ஸ்பாட்டுக்கு அவர் போலீஸ் கெட்டப்பில் சென்றபோது, விஜய், மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் இந்த கெட்டப்பில் அசத்தலாக இருப்பதாக கருத்து சொன்னார்களாம். அதோடு, ஆக்சன் காட்சிகளில் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் வழங்கினார்களாம். அதையடுத்து, சண்டை காட்சிகளில் எதிரிகளை விஜய்சாந்தி பாணியில் அடித்து துவம்சம் செய்தபடி நடித்துள்ளாராம் காஜல்.

இதைத்தொடர்ந்து, இனிமேல் வெறும் ரொமான்ஸ் கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காமல், விஜயசாந்தி பாணியில் அதிரடி ஆக்சன் கதைகள் கிடைத்தாலும் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு சில அபிமான டைரக்டர்களிடம் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார் காஜல்.

Visit website

[Continue reading...]

காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு Vegetables fruits will come to home government organized by to sell self help groups

- 0 comments

காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு Vegetables fruits will come to home government organized by to sell self help groups 

 

சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகம் 200 இடங்களில் தொடங்கப்பட்டு குறைந்த விலை யில் உணவு வழங்கி வரு கிறது. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம்.
தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து முக்கிய வீதிகளில் சந்திப்புகளில் விற்க திட்டமிடப்படுகிறது.
இந்த பணியில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களை ஈடுபடுத்தினால் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.
கோயம்பேட்டில் பொது மக்கள் நேரிடையாக சென்று காய்கறிகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பகுதியிலும் சுயஉதவி குழு பெண்கள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்கிறது.
இதனால் பொது மக்கள் அலைந்து திரியாமல் வீட்டிற்கு அருகிலேயே மலிவான விலையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பெற முடியும்.
கோயம்பேடு மார்க்கெட் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம், பராமரிப்பு மையம் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. பொது மக்கள் காய்கறிகள் வாங்க வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பகுதி ஏழை பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாக அமையும்.

 


[Continue reading...]

சென்னையில் தடையை மீறி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது thirumavalavan including 500 people arrested

- 0 comments

சென்னையில் தடையை மீறி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது thirumavalavan including 500 people arrested

சென்னையில் தடையை மீறி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது thirumavalavan including 500 people arrested சென்னை, செப். 12–விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.டீசல், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்து திருமாவளவன் கோஷங்களை எழுப்பினார். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று கண்டன குரல் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், நிர்வாகிகள் பாவரசு, பாலசிங்கம், இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி, இளஞ்சேகுவாரே, விடுதலை செழியன், கடம்பன், சவுந்தர், கபிலன், வீர.ராஜேந்திரர் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger