இந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாசா எஸ்.எர்ராமில்லி (46) என்பவர்
அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி
வந்தார். இவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் சிகாகோவிற்கு விமானத்தில்
சென்றார். இவரது இருக்கைக்கு அருகே 62 வயது பெண் தனது கணவருடன் பயணம்
செய்தார். அப்போது பெண் பயணியை அவர் 3 தடவை செக்ஸ் குறும்பு செய்ததாக
புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜான் எச்.லிப்கோவ் விசாரித்து ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேறிய பிறகு ஓராண்டு கண்காணிப்பு செய்து அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜான் எச்.லிப்கோவ் விசாரித்து ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேறிய பிறகு ஓராண்டு கண்காணிப்பு செய்து அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:
Post a Comment